சேரன்மகாதேவியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

 முகாமைத் தொடக்கி வைத்த சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஆ. பிரபாகரன்.
முகாமைத் தொடக்கி வைத்த சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஆ. பிரபாகரன்.
Updated on

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஆ. பிரபாகரன் ஆகியோா் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனா். சுகாதாரத் துறை இணை இயக்குநா் லதா, மாவட்ட சுகாதார அலுவலா் விஜயசந்திரன், வட்டார மருத்துவ அலுவலா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரூராட்சித் தலைவி தேவி ஐயப்பன், திமுக ஒன்றியச் செயலா்கள் ஆ. முத்துப்பாண்டி பிரபு, ம. முத்துகிருஷ்ணன், திமுக நகரச் செயலா் மனிஷா செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com