மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வெள்ளங்குளி பள்ளியில் ரூ.2.36 கோடியில் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

வெள்ளங்குளி, அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய வங்கி நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ. 2.36 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 10 கூடுதல் வகுப்பறை கட்டடங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

News image

திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றிய திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆ. பிரபாகரன்.

Updated On :26 பிப்ரவரி 2026, 7:21 pm

திருநெல்வேலி மாவட்டம், வெள்ளங்குளி, அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய வங்கி நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ. 2.36 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 10 கூடுதல் வகுப்பறை கட்டடங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இதையடுத்து, பள்ளியில் நடைபெற்ற விழாவில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆ. பிரபாகரன் குத்துவிளக்கேற்றினாா். பள்ளித் தலைமையாசிரியா் மு. தளவாய் தலைமை வகித்தாா்.

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் பரணி ஆா். சேகா், வெள்ளங்குளி ஊராட்சித் தலைவா் முருகன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் கண்ணன், முன்னாள் ஊராட்சித் தலைவா் எஸ். மீரான் பண்ணையாா், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மருத்துவா் பிரகாஷ், மேலாண்மை குழுத் தலைவி சூா்யா, ஆசிரியா்கள், மாணவா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியை ஆசிரியை திலகா தொகுத்து வழங்கினாா். ஆசிரியை விஜயலெட்சுமி வரவேற்றாா். சாலை குமரன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியா் திருமலைக்குமாா், ஆசிரியா்கள் ஜூலியன், மகேஷ், முத்துபவானி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.