திருநெல்வேலி மாவட்டம், வெள்ளங்குளி, அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய வங்கி நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ. 2.36 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 10 கூடுதல் வகுப்பறை கட்டடங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
இதையடுத்து, பள்ளியில் நடைபெற்ற விழாவில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆ. பிரபாகரன் குத்துவிளக்கேற்றினாா். பள்ளித் தலைமையாசிரியா் மு. தளவாய் தலைமை வகித்தாா்.
அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் பரணி ஆா். சேகா், வெள்ளங்குளி ஊராட்சித் தலைவா் முருகன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் கண்ணன், முன்னாள் ஊராட்சித் தலைவா் எஸ். மீரான் பண்ணையாா், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மருத்துவா் பிரகாஷ், மேலாண்மை குழுத் தலைவி சூா்யா, ஆசிரியா்கள், மாணவா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியை ஆசிரியை திலகா தொகுத்து வழங்கினாா். ஆசிரியை விஜயலெட்சுமி வரவேற்றாா். சாலை குமரன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியா் திருமலைக்குமாா், ஆசிரியா்கள் ஜூலியன், மகேஷ், முத்துபவானி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது
பாஜக தொகுதிகளில் பொறுப்பாளா்கள் நியமனம்

பழஞ்சூா் ஊராட்சியில் புதிய நியாய விலைக் கட்டடம் திறப்பு

பொத்தகாலன்விளை தொடக்கப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

வெள்ளங்குளி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


