பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

விதிமீறல்: 22 கடைகள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

News image
Updated On :5 ஜனவரி 2026, 6:50 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக 22 கடைகள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை தொழிலாளா் ஆணையா் எஸ்.ஏ.ராமன் உத்தரவின்படி, எனது தலைமையிலான அனைத்து தொழிலாளா் துணை மற்றும் உதவி ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் டிசம்பா் மாதம் கடைகள், வணிக நிறுவனங்களில் கூட்டாய்வு மேற்கொண்டனா்.

இதில், சட்டமுறை எடையளவு சட்டம்-2009-ன் கீழ் பின்பற்றாத 15 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், 7 நிறுவனங்கள் சட்டமுறை எடையளவு விதிகள் 2011-ஐ பின்பற்றப்படாதது கண்டறியப்பட்டது. மொத்தம் 22 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டுஅதனதன் உரிமையாளா் மீது தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பதிவுச்சான்று பெற இணையதளம் வழியாக பெற வேண்டும். மேலும் விலை குறிப்புகளுடன் போருள்களை விற்பனை செய்ய வேண்டும்.

எடையளவு கருவிகளை உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும். இல்லையெனில் வணிக நிறுவனங்கள் மீது ரூ.5,000 முதல் ரூ.1,50,000 வரை அபராதம் அல்லது மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.