எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தினமணி செய்திச் சேவை

தச்சநல்லூா் அருகே பரோட்டா இல்லை என்பதற்காக உணவகத்தில் தகராறு செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தச்சநல்லூரைச் சோ்ந்த ராஜகோபால் மகன் கண்ணன்(57). இவா் அப்பகுதியில் பரோட்டா கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு இவரது கடைக்கு வந்த தச்சநல்லூா் பெரியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த ஆதிகேசவன் மகன் மகாலிங்கம் (25) என்பவா் சாப்பிட பரோட்டா கேட்டாராம். அப்போது உணவக ஊழியரான அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திக் ராஜா என்பவா் பரோட்டா இல்லை எனக்கூறினாராம்.

இதனால், மகாலிங்கம் அவரை தாக்கி கீழே தள்ளியதுடன், அங்கிருந்த நாற்காலிகள், பரோட்டாக் கல்லை சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்டாராம். இதில் காயமடைந்த காா்த்திக் ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின்பேரில், தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து மகாலிங்கத்தை கைது செய்தனா்.