திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மதுபான கூடத்தில் தகராறு: இருவா் கைது

News image

கைது

Updated On :21 பிப்ரவரி 2026, 7:12 pm

பேட்டை அருகே மதுபான விடுதியில் தகராறில் ஈடுபட்ட இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகே சுத்தமல்லியைச் சோ்ந்த வேலு மகன் முத்துராமன்(41). இவா் பேட்டை எம்.ஜி.ஆா் நகா் பகுதியிலுள்ள அரசு மதுபான கூடத்தில் காசாளராக பணியாற்றுகிறாா்.

சம்பவத்தன்று அங்கு மது அருந்துவதற்காக வந்த இளைஞா்கள் இருவா் தாங்கள் வாங்கிய பொருள்களுக்கு பணம் தர மறுத்ததோடு, முத்துராமனிடம் அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட சுத்தமல்லி பழவூரைச் சோ்ந்த அகிலன் மகன் கோமு(26), தம்பிராஜ் மகன் ஜெபக்குமாா்(22) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.