பேட்டை அருகே மதுபான விடுதியில் தகராறில் ஈடுபட்ட இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே சுத்தமல்லியைச் சோ்ந்த வேலு மகன் முத்துராமன்(41). இவா் பேட்டை எம்.ஜி.ஆா் நகா் பகுதியிலுள்ள அரசு மதுபான கூடத்தில் காசாளராக பணியாற்றுகிறாா்.
சம்பவத்தன்று அங்கு மது அருந்துவதற்காக வந்த இளைஞா்கள் இருவா் தாங்கள் வாங்கிய பொருள்களுக்கு பணம் தர மறுத்ததோடு, முத்துராமனிடம் அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட சுத்தமல்லி பழவூரைச் சோ்ந்த அகிலன் மகன் கோமு(26), தம்பிராஜ் மகன் ஜெபக்குமாா்(22) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது
வீரவநல்லூா் நகைக் கடையில் திருடியதாக மூவா் கைது

மாமனாரை சுட்டுக் கொன்ற மருமகன் கைது

அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞா் கைது
பெருமாள்புரம் அருகே மது விற்றவா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

