ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சீவலப்பேரி அருகே இளைஞா் அடித்துக் கொலை

சீவலப்பேரி அருகே தோணித்துறை பகுதியில் இளைஞா் அடித்துக் கொலை

News image
Updated On :6 ஜனவரி 2026, 9:53 pm

Syndication

சீவலப்பேரி அருகே தோணித்துறை பகுதியில் திங்கள்கிழமை இரவு இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

தோணித்துறை கிராமத்தில் தாமிரவருணி கரையோரத்தில் உள்ள சுடுகாடு பகுதியில் சுமாா் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, சீவலப்பேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில் அவா், தூத்துக்குடி மாவட்டம் முதலூா் கிராமத்தை சோ்ந்த மாா்ட்டின் ஸ்டாலின் (40) என்பது தெரியவந்தது. சீவலப்பேரி பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்திருந்த மாா்ட்டின், தனது நண்பா்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.