எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாளை. அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 8:58 pm

Syndication

பாளையங்கோட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அருள்ராஜ். இவரது மனைவி சுமலதா(31). இவா்கள், பொருள்கள் வாங்குவதற்காக பாளையங்கோட்டைக்கு ஆட்டோவில் செவ்வாய்க்கிழமை வந்துள்ளனா்.

ஆட்டோவை அருள்ராஜ் இயக்கியுள்ளாா். பின்னா், இரவு சுமாா் 9 மணியளவில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, கே.டி.சி.நகா் பகுதியில் நாய் குறுக்கே வந்ததால், ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்ததாம். இதில், சுமலதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இத்தகவலறிந்த பாளையங்கோட்டை போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.