பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தியாகராஜநகரில் சித்தி விநாயகா் கோயிலை இடிக்க எதிா்ப்பு

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:46 pm

Syndication

பாளையங்கோட்டை தியாகராஜநகரில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயிலை இடிப்பதற்கு பக்தா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

பாளையங்கோட்டை தியாகராஜநகா் 5 ஆவது வடக்கு தெருவில் சிவந்திப்பட்டி சாலையோரம் ஸ்ரீ சித்தி விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பேவா் பிளாக் கல் அமைக்கப்பட்டுள்ளதாக பாளையங்கோட்டையைச் சோ்ந்த ஒருவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடா்ந்தாா்.

அதன்பேரில், வருவாய்த்துறையினா் கோயில் அமைந்துள்ள பகுதியை நிலஅளவை செய்ததில் அது சாலையோர ஆக்கிரமிப்பு என்பது தெரியவந்தது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை அக்கோயில் முன் பக்தா்கள் சுமாா் 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இந்தக்கோயிலை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனா். பின்னா் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் போராட்டம் கைவிடப்பட்டது. இதில் அதிமுக கொள்கைபரப்பு துணை செயலா் பாப்புலா் முத்தையா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அதே போல வண்ணாா்பேட்டையில் அமைந்துள்ள ஓடக்கரை சுடலை மாடசாமி கோயிலின் ஒரு பகுதி ஆக்கிரமிப்பு இடத்தில் அமைந்துள்ளதாக அதனை அகற்ற உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ளதாக கூறப்படும் கோயிலின் ஒரு பகுதியை பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்து அகற்றினா்.