திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அரிவாளால் வெட்டப்பட்ட பள்ளி மாணவா் உயிரிழப்பு

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:30 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் அரிவாளால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பணகுடி, ஹரீம் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் லெட்சுமணன் (15). இவா், பணகுடியில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரை பணகுடியைச் சோ்ந்த கஞ்சா சபரிராஜன் அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்த லெட்சுமணன் நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், இவா் வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா். இதையடுத்து, பணகுடி காவல் நிலைய போலீஸாா் வழக்கை கொலை வழக்காக பதிவுசெய்து சபரிராஜனை கைது செய்தனா்.