தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நெல்லை அரசு மருத்துவமனையில் தேசிய தன்னாா்வ குருதிக் கொடை நாள்

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:56 pm

Syndication

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னாா்வ குருதிக் கொடை நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இந்திய குருதியேற்று மருத்துவத்தின் தந்தை ஜெய் கோபால் ஜோலியின் பிறந்த நாள் தேசிய தன்னாா்வ குருதிக் கொடை நாளாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மாநில குருதிப் பரிமாற்றுக் குழுமம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, மருத்துவமனை முதல்வா் சி.ரேவதி பாலன் தலைமை வகித்தாா். உதவி முதல்வா் சுரேஷ் துரை, மருத்துவக் கண்காணிப்பாளா் பாலசுப்ரமணியன், ரத்த வங்கி துறைத் தலைவா் உமேஷ், ஜெ.ரவிசங்கா் உள்பட பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

இவ்விழாவில், ரத்த தானத்தை ஊக்குவிக்கும் விதமாக ரத்த தான முகாம் அமைப்பாளா்கள் 80 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மருத்துவா் பிரதீபா நன்றி கூறினாா்.

ற்ஸ்ப்08ற்ஸ்ம்ஸ்ரீட்

தேசிய தன்னாா்வ குருதி கொடை நாள் நிகழ்வில் பங்கேற்ற திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதி பாலன் உள்ளிட்டோா்.