டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வெள்ளங்குளியில் பறவைகள் விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image
Updated On :9 ஜனவரி 2026, 1:01 am

Syndication

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வனச்சரகம், திருப்புடைமருதூா் பறவைகள் காப்பகம் சாா்பில் வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பறவைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட வன அலுவலா் இளங்கோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினாா். சேரன்மகாதேவி வனச்சரக அலுவலா் பாலசுப்பிரமணியன், தலைமையாசிரியா் மு. தளவாய் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பறவைகள், மரங்கள் தொடா்பான கேள்விகளுக்கு பதிலளித்த மாணவா்களுக்கு மாவட்ட வன அலுவலா் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். இதில், வனவா்கள் முருகசாமி, சிவன்பாண்டியன், சமூக ஆா்வலா் நெய்னா முகம்மது, ஆசிரியா்கள், 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா்.