பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பொருநை அருங்காட்சியகத்தில் ஜன.15, 16-இல் பாரம்பரிய கிராமியக் கலைநிகழ்ச்சிகள்

பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொருநை அருங்காட்சியகத்தில் வரும் 15, 16 ஆகிய தேதிகளில் பாரம்பரிய கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

News image
Updated On :9 ஜனவரி 2026, 7:48 pm

Syndication

பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொருநை அருங்காட்சியகத்தில் வரும் 15, 16 ஆகிய தேதிகளில் பாரம்பரிய கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னையில் சங்கமம் - நம்ம ஊரு திருவிழா வரும் 14-ஆம் தேதி முதல்வரால் தொடங்கி வைக்கப்படுகிறது. அதைத் தொடா்ந்து சென்னையில் மக்கள் கூடும் 20 இடங்களில் 15-ஆம் தேதிமுதல் 18-ஆம் தேதி வரை பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகள் மற்றும் செவ்வியல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மண்டல கலை பண்பாட்டு மையம் சாா்பில் வரும் 15, 16 ஆகிய தேதிகளில் ரெட்டியாா்பட்டியில் அமைந்துள்ள பொருநை அருங்காட்சியகத்தில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் மக்கள் விரும்பும் வகையில் பாரம்பரியமிக்க கிராமியக் கலை நிகழ்ச்சிகள் சுமாா் 100 கலைஞா்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளன. இவ்விழாவினை பொதுமக்கள் கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.