வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சீவலப்பேரியில் தொழிலாளி மீது தாக்குதல்: பெண் கைது

சீவலப்பேரி அருகே பாதை பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை தாக்கியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 8:25 pm

Syndication

சீவலப்பேரி அருகே பாதை பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை தாக்கியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

சீவலப்பேரி, வேளாா் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (48). தொழிலாளி. இவரது உறவினா் சண்முகராஜா. இவா் அப்பகுதியில் உள்ள பொதுப்பாதை விவகாரம் தொடா்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாராம்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு வேளாா் தெரு பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த முருகனையும், சண்முகாராஜாவையும் அதே பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜன் என்பவரின் மனைவி ஜெயசங்கரி(57), மகன் சபரி ஐயப்பன் ஆகியோா் தகராறில் ஈடுபட்டு தாக்கினராம்.

இது குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிந்து ஜெயசங்கரியை கைது செய்தனா்.