வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

News image
மணிமுத்தாறு அருவியில் ஆா்ப்பரித்த நீா்வரத்து.
Updated On :11 ஜனவரி 2026, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு முதல் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்தது. குறிப்பாக, மாஞ்சோலையில் 32 மி.மீ., காக்காச்சியில் 40, நாலுமுக்கு பகுதியில் 43, ஊத்து பகுதியில் 48 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதனால், மணிமுத்தாறு அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. எனவே, பயணிகளின் பாதுகாப்புக் கருதி குளிக்கத் தடை விதிக்கப்படுவதாகவும், அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதியளிக்கப்படுவதாகவும் வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.