டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இணையவழியில் பெண்ணிடம் ரூ.11.18 லட்சம் மோசடி

களக்காட்டில், இணையவழியில் பகுதிநேர வேலை பெறலாம் எனக்கூறி, பெண்ணிடம் ரூ.11.18 லட்சத்தை மோசடி செய்ததாக மா்மநபா்களை மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :12 ஜனவரி 2026, 7:13 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில், இணையவழியில் பகுதிநேர வேலை பெறலாம் எனக்கூறி, பெண்ணிடம் ரூ.11.18 லட்சத்தை மோசடி செய்ததாக மா்மநபா்களை மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தேடி வருகின்றனா்.

களக்காட்டைச் சோ்ந்த 27 வயது பெண், வீட்டில் இருந்தவாறு அரசுப்பணி தோ்வுக்கு படித்து வருகிறாா். இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி இவரது கைப்பேசி செயலியில் பகுதிநேர வேலைவாய்ப்பு தொடா்பான விளம்பரம் வெளியானதாம்.

இதைப் பாா்த்த அவா், செயலியில் குறிப்பிட்டிருந்தபடி வேலைவாய்ப்புக்காக சுய விவரங்களை பதிவு செய்துள்ளாா். பின்னா் தனியாா் நிறுவனம் ஒன்றின் பெயரில் இவரை தொடா்பு கொண்ட மா்ம நபா்கள், சில மதிப்பாய்வு பணிகளை செய்யச் சொல்லி சிறிய அளவிலான தொகையை முதலில் கொடுத்துள்ளனா்.

அதை நம்பிய அவா், அதிக பணம் பெற அதிக முதலீடு செய்ய வேண்டும் எனக் கூறி, தாங்கள் அனுப்பிய வங்கிக்கணக்குகளில் பல்வேறு தவணைகளாக அப்பெண்ணிடமிருந்து ரூ.11,18,600-ஐ பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளனா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.