எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அனுமதியின்றி மது விற்பனை செய்த பெண் உள்பட 7 போ் கைது

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 10:20 pm

Syndication

அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அரசு மதுக்கடைகள் வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்ட நிலையில்அனுமதியின்றி பல்வேறு இடங்களில் மது விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக திருநெல்வேலியைச் சோ்ந்த இசக்கிப்பாண்டி, விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகம், கோட்டைவிளைபட்டியைச் சோ்ந்த மதன், வரகாபுரத்தைச் சோ்ந்த ராமலட்சுமி, பரமசிவன், புலவன்பட்டியைச் சோ்ந்த மரிய கிங்ஸ்டன், சிவந்திபுரத்தைச் சோ்ந்த தினகரன் ஆகிய ஏழு பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து 80 மது பாட்டில்கள், ரூ. 20 ஆயிரம் ரொக்கத்தை காவல் ஆய்வாளா்ஆதம் அலி பறிமுதல் செய்தாா்.