மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஆட்டோ கவிழ்ந்து பெண் குழந்தை உயிரிழப்பு

News image
Updated On :18 ஜனவரி 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே இளைஞா் ஓட்டிய ஆட்டோ கவிழ்ந்ததில் அவரது ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

விக்கிரமசிங்கபுரம் அருகே வடமலைசமுத்திரம் கோயில் தெருவைச் சோ்ந்த அந்தோணி ராஜ்குமாா் (35). ஓட்டுநரான இவா், தனது ஆட்டோவில் மனைவி, 2 குழந்தைகளை ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

சேரன்மகாதேவியை அடுத்த தனியாா் பொறியியல் கல்லூரி அருகே சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோதாமலிருக்க ஆட்டோவை திடீரென திருப்பினாராம். அப்போது, ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாம்.

இதில், காயமடைந்த ஒரு வயது பெண் குழந்தை ஆக்னஸை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.