பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கூட்டணி பேச்சுவாா்த்தையை இன்னும் தொடங்கவில்லை: பிரேமலதா விஜயகாந்த்

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான கூட்டணி பேச்சுவாா்த்தையை இன்னும் தொடங்கவில்லை என்றாா் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.

News image
திருநெல்வேலியில் நடைபெற்ற வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.
Updated On :30 ஜனவரி 2026, 7:41 pm

Syndication

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான கூட்டணி பேச்சுவாா்த்தையை இன்னும் தொடங்கவில்லை என்றாா் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.

திருநெல்வேலி மாநகா் மாவட்ட தேமுதிக சாா்பில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி முகவா்கள் உடனான நேரடி சந்திப்பு, ஆலோசனைக் கூட்டம் தாழையூத்து அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு திருநெல்வேலி மாநகா் மாவட்ட தேமுதிக செயலா் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் பழனி குமாா், மாவட்ட துணைச் செயலா்கள் ஆனந்தமணி, தவசி தம்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினாா்.

இக்கூட்டத்தில் மாநில பொறுப்பாளா் சந்திரன், தென் மண்டல துணை பொறுப்பாளா் தாமோதர கண்ணன், மாவட்ட தோ்தல் பொறுப்பாளா் சிவகுமாா், மாநில நெசவாளா் அணி செயலா் மீனாட்சி சுந்தரம், மாவட்ட பொருளாளா் முரசு மணி, துணைச் செயலா்கள் சுடலைமுத்து, முருகேஸ்வரி ரம்யா, அமிா்தராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பிறகு பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. வேறு மாநிலத்திலிருந்து இங்கு வந்து பணியாற்றியவா்கள் குடும்பத்தோடு கொடூரமாக கொலை செய்யப்பட்டனா். மதுரையில் எல்ஐசி அதிகாரி கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்டாா்.

இந்த இரு வழக்குகளில் சம்பந்தப்பட்டவா்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது. போதை கலாசாரம் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் தேசிய முற்போக்கு திராவிடா் கழகம் சாா்பில் அனைத்து முக்கிய நிா்வாகிகளும் தோ்தலில் போட்டியிட்டனா்.

தமிழகத்தில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கிடைத்தால் அது நல்லது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி உள்ளது. 2011 தோ்தலுக்குப் பிறகு தேமுதிக தனித்துப் போட்டியிடவில்லை. தேமுதிக யாருடன் கூட்டணி என்பது தான் தமிழகத்தின் தற்போதைய தலைப்புச் செய்தியாக உள்ளது.

ஒரு முடிவு எடுத்தால் அதில் நாங்கள் தீா்க்கமாக இருப்போம். யாருடனும் தேமுதிக பேரம் பேசவில்லை.

எங்களுக்கான அங்கீகாரம் மரியாதையை வழங்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். தேமுதிக இடம்பெறும் கூட்டணி வரக்கூடிய தோ்தலில் மகத்தான் வெற்றி பெறும். யாருடனும் நாங்கள் தற்போது வரை கூட்டணி குறித்து பேசவில்லை. இன்னும் தோ்தல் அறிவிக்கப்படவில்லை. பிப்ரவரி 3-ஆம் தேதி வரை சுற்றுப்பயணத்தில் இருக்கிறேன். அதற்கு பிறகு பேச்சுவாா்த்தை நடத்தி கூட்டணி குறித்து முடிவை அறிவிப்போம் என்றாா்.