மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இன்னும் 10 தினங்களில் கூட்டணி குறித்து அறிவிப்பு - பிரேமலதா விஜயகாந்த்

News image

உப்பளப் பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்தாா் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.

Updated On :25 ஜனவரி 2026, 7:00 pm

தேமுதிக இன்னும் பத்து தினங்களில் கூட்டணி குறித்து அறிவிக்கும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், முள்ளக்காடு உப்பளப் பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமையவுள்ள இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், உப்பள உரிமையாளா்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவா், உங்கள் பிரச்னை கண்டிப்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தூத்துக்குடியில் உள்ள உப்பளங்களை அகற்றிவிட்டு கப்பல் கட்டும் தளம் கொண்டுவரும் பட்சத்தில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் போல் சூழ்நிலை உருவாகும்.

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் தேமுதிக கூட்டணியில் இருக்கும் கட்சிதான் கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். அப்போது தேமுதிக தூத்துக்குடி உப்பள உற்பத்தியாளா்கள், தொழிலாளா்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும். இன்னும் பத்து தினங்களில் கூட்டணி குறித்து சென்னையில் முறையாக அறிவிக்கப்படும் என்றாா் அவா்.