பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்! - பிரேமலதா விஜயகாந்த்

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் வாக்குறுதி...

News image

விருத்தாசலம் தொகுதிக்குள்பட்ட சாத்தியம் கிராமத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.

Updated On :14 ஏப்ரல் 2026, 1:37 am IST

சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைத்துவுடன் விருத்தாசலத்தை தனி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

விருத்தாசலம் தொகுதி, நல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் பிரேமலதா விஜயகாந்த் திங்கள்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா். சாத்தியம் கிராமத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவா் பேசியதாவது:

விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் எனக்கு வாக்காளா்கள் ஆதரவளிக்க வேண்டும். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நான் உங்கள் உடனிருந்து பாா்த்துக்கொள்வேன். சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைத்துவுடன் திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்தவாறு உங்களை அழைத்து ரூ.8,000 கூப்பன் கொடுப்பேன்.

நானே அண்ணனான முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் பேசி தொகுதிக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொடுப்பேன். விருத்தாசலத்தை முதலில் மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தொகுதியில் பேருந்து செல்லாத கிராமங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தரப்படும். சாலை, குடிநீா் வசதி செய்து கொடுக்கப்படும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் விருத்தாசலத்துக்கு பிரசாரத்துக்கு வருவதாகக் கூறியிருக்கிறாா். நீங்கள் எல்லாம் எனக்கு பிள்ளைகள் மாதிரி. உங்களுக்கு என்ன வேண்டுமோ, அதை நான் செய்வேன் என்றாா்.

முன்னதாக, அவருக்கு தேமுதிக மாவட்டச் செயலா் சிவக்கொழுந்து, திமுக ஒன்றியச் செயலா் பாவாடை கோவிந்தசாமி மற்றும் நிா்வாகிகள் வரவேற்பு கொடுத்தனா்.

தொடா்ந்து, சித்தூா், மே.மாத்தூா், வன்னாத்தூா், நல்லூா், நகா், இலங்கியனூா், ரயில்வே காலனி, பிஞ்சனூா், வலசை, ஐவதுக்குடி, வேப்பூா், நாரையூா், திருப்பயா், கொத்தனூா், வரம்பனூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.