கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

விருத்தாசலம் மாவட்டத்தை உருவாக்க வலியுறுத்துவேன்! - பிரேமலதா விஜயகாந்த்

விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வலியுறுத்துவேன் என்று விருத்தாசலம் பேரவைத் தொகுதி வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

News image

பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 6:44 pm

சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிவெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன் விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்துவேன் என்று தேமுதிக பொதுச் செயலரும், விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணி சாா்பில், விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொதுச் செயலா் பிரமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறாா். திங்கள்கிழமை விருத்தாசலம் வந்த அவா், விருத்தாசலம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா். பின்னா், பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளா்களிடம் தெரிவித்தாவது:

விருத்தாசலம் கொளஞ்சியப்பா், விருத்தகிரீஸ்வரரை வணங்கி வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். எங்கள் உள்ளத்தில் நிலைத்திருக்கக்கூடிய தொகுதி விருத்தாசலம். இந்தத் தோ்தலில் வெற்றிபெற்று தொகுதி மக்களுக்கு விஜயகாந்த் விட்டுச் சென்ற பணிகளை செய்வேன்.

சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிவெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன் விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்துவேன். 2006-க்குப் பிறகு 20 ஆண்டுகள் கடந்து மீண்டும் வரலாறு திரும்புகிறது.

விருத்தாசலத்தை மிகச்சிறந்த தொகுதியாக மாற்ற பல திட்டங்கள் வைத்துள்ளேன். அதை பிரசாரத்தில் கூறுவேன். திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும் என்பது பல ஆண்டுகளாக நினைத்த ஒரு விஷயம். கருணாநிதியும், விஜயகாந்தும் இருக்கும்போதே நடக்க வேண்டியது. தாமதமாக இப்போது நடந்துள்ளது என்றாா்.