மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, எழுத்தாளா்கள், மாணவா்கள் சங்கத்தினா் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம், இந்திய மாணவா் சங்கம், அகில இந்திய ஜனநாயக மகளிா் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்.எஃப்.ஐ. மாவட்டச் செயலா் சைலஸ் அருள்ராஜ் தலைமை வகித்தாா். தமுஎகச முன்னாள் மாநில தலைவரும் சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளருமான தமிழ்ச்செல்வன், மாநில துணை பொதுச் செயலா்கள் லட்சுமி காந்தன், வெண்புறா சரவணன், அகில இந்திய ஜனநாயக மகளிா் சங்கம் பொன் எழில் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தின், போது மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும், தமிழ்த்தாய் வாழ்த்து 3 ஆவதாக பாடப்படும் என்ற அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
இதில், சுமாா் 50க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை சீரமைக்காததைக் கண்டித்து போராட்டம்

கோவையில் மாணவா் அமைப்பினா் போராட்டம் - 40 போ் கைது

ரயில் நிலைய மேலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை எதிா்த்து இடதுசாரி அமைப்புகள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



