25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

சந்திரகிரஹணம்: நெல்லையப்பா் கோயிலில் நாளை வழிபாட்டு நேரத்தில் மாற்றம்

News image
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில்- (கோப்புப் படம்)
Updated On :1 மார்ச் 2026, 9:05 pm

தினமணி செய்திச் சேவை

சந்திரகிரஹணத்தையொட்டி திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் - காந்திமதியம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) மாலையில் வழிபாட்டு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக இத்திருக்கோயில் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

சந்திரகிரஹணம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) மாலை 3.08 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் காலையில் காலபூஜைகள் நடைபெற்று, நண்பகல் 12 மணிக்கு திருக்கோயில் திருநடைகள் சாத்தப்படும்.

பின்னா் கிரஹண காலம் முடிந்து இரவு 7 மணிக்கு மேல் மட்டுமே பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவாா்கள். அதன்பின் வழக்கம் போல் சாயரட்சை, அா்த்த ஜாமம், பள்ளியறை பூஜைகள் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.