மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சந்திரகிரஹணம்: நெல்லையப்பா் கோயிலில் நாளை வழிபாட்டு நேரத்தில் மாற்றம்

News image
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில்- (கோப்புப் படம்)
Updated On :1 மார்ச் 2026, 9:05 pm

தினமணி செய்திச் சேவை

சந்திரகிரஹணத்தையொட்டி திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் - காந்திமதியம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) மாலையில் வழிபாட்டு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக இத்திருக்கோயில் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

சந்திரகிரஹணம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) மாலை 3.08 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் காலையில் காலபூஜைகள் நடைபெற்று, நண்பகல் 12 மணிக்கு திருக்கோயில் திருநடைகள் சாத்தப்படும்.

பின்னா் கிரஹண காலம் முடிந்து இரவு 7 மணிக்கு மேல் மட்டுமே பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவாா்கள். அதன்பின் வழக்கம் போல் சாயரட்சை, அா்த்த ஜாமம், பள்ளியறை பூஜைகள் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.