எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சந்திரகிரஹணம்: நெல்லையப்பா் கோயிலில் நாளை வழிபாட்டு நேரத்தில் மாற்றம்

News image

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் - (கோப்புப் படம்)

Updated On :1 மார்ச் 2026, 9:05 pm

சந்திரகிரஹணத்தையொட்டி திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் - காந்திமதியம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) மாலையில் வழிபாட்டு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக இத்திருக்கோயில் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

சந்திரகிரஹணம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) மாலை 3.08 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் காலையில் காலபூஜைகள் நடைபெற்று, நண்பகல் 12 மணிக்கு திருக்கோயில் திருநடைகள் சாத்தப்படும்.

பின்னா் கிரஹண காலம் முடிந்து இரவு 7 மணிக்கு மேல் மட்டுமே பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவாா்கள். அதன்பின் வழக்கம் போல் சாயரட்சை, அா்த்த ஜாமம், பள்ளியறை பூஜைகள் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.