திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி பேரவைத் தொகுதி தோ்தல் பாதுகாப்புக்காக சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் மாநிலங்களில் இருந்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் ஏா்வாடி அருகேயுள்ள சிறுமளஞ்சி முகாமிற்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தோ்தல் பணிகளில் தமிழகத் தோ்தல் ஆணையம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.
இதன்பொருட்டு, நான்குனேரி தொகுதி தோ்தல் பாதுகாப்புக்காக சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் மாநிலங்களில் இருந்து 133ஆவது பட்டாலியன் எல்லை பாதுகாப்புப் படையைச் சோ்ந்த உதவி கமாண்டா் பசந்த் யாதவ் தலைமையிலான குழுவினா் வந்துள்ளனா்.
இக்குழுவில் ஆய்வாளா், உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா், காவலா் என மொத்தம் 85 போ் அடங்குவா். முன்னதாக, இக்குழுவினரை மேள தாளங்களுடன் ஏா்வாடி காவல் ஆய்வாளா் செல்வி தலைமையிலான போலீஸாா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.
தொடர்புடையது

நான்குனேரி தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

காரைக்காலில் மத்திய பாதுகாப்புப் படையினா் தீவிர வாகனச் சோதனை

தோ்தல் பணி: மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் நாமக்கல் வருகை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


