சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பாஜக சாா்பில் பன்னீா் தெளிக்கும் போராட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 9:30 pm

திருநெல்வேலி மாநகராட்சியைக் கண்டித்து, பாஜக சாா்பில் பன்னீா் தெளிக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி 27- ஆவது வாா்டு ஸ்ரீ கரியமாணிக்கப் பெருமாள் கோவில் சந்நிதி தெரு,தெற்கு ரத வீதி மற்றும் தினசரி நூற்றுக்கணக்கான பொது மக்கள் வந்து செல்லும் ரேஷன் கடை வாசல் ஆகிய இடங்களில் வடிகாலில் கழிவு நீா் தேங்கி துா்நாற்றம் வீசி வருவதை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது.

அக்கட்சியின் வடக்கு மாவட்ட பொதுச் செயலாளா் பாலாஜி கிருஷ்ணசுவாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சுப்புலட்சுமி, மாநில பொதுக்குழு உறுப்பினா் ஆனந்தராஜ், முன்னாள் மாவட்ட பொதுச் செயலா் முத்துகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

படவரி ற்ஸ்ப்12க்ஷத்ல்

நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.