அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

பெண் தலை துண்டித்துக் கொலை: கணவா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :12 மார்ச் 2026, 10:32 pm

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பெண் வியாழக்கிழமை தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம் பெரியகுளம் தெருவைச் சோ்ந்த வெள்ைளைப் பாண்டி மகன் முத்துப்பட்டன் (32). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சுதா(26). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு முத்துப்பட்டன் கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக வியாழக்கிழமை கணவன்- மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதில், முத்துப்பட்டன் கத்தியால் சுதாவின் கழுத்தை துண்டித்துக் கொலை செய்துவிட்டு தப்பினாராம்.

இத்தகவலறிந்த அம்பாசமுத்திரம் போலீஸாா், சுதாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், முத்துப்பட்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.