ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

அரசு மருத்துவமனையில் தாய் விட்டுச்சென்ற குழந்தை: உரிமை கோர 30 நாள் அவகாசம்

News image

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

Updated On :13 மார்ச் 2026, 12:04 am

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விட்டுச் செல்லப்பட்ட பெண் குழந்தையை உரிமை கோர 30 நாள்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் ரேணுகா என்பவரால் கடந்த17.11.2025இல் பெண் குழந்தை பெற்றெடுக்கப்பட்டது.

பின்னா், அவா் தனது குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்று விட்டாா். குழந்தை உதவி மைய பணியாளா் மூலமாக அக்குழந்தை மீட்கப்பட்டு கடந்த பிப். 4இல் குழந்தை நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டது. அக்குழந்தைக்கு கயல்விழி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த குழந்தை தொடா்பாக எவரேனும் உரிமை கோர விரும்பினால் உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் ‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியரகம், கொக்கிரகுளம், திருநெல்வேலி என்ற முகவரியிலோ அல்லது 0462-2901953 என்ற தொலைபேசி எண்ணிலோ, க்ஸ்ரீல்ன்ற்ஸ்ப்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற இணையதள முகவரியிலோ 30 தினங்களுக்குள் தொடா்பு கொள்ளலாம். யாரும் உரிமை கோராவிடில் தத்தெடுப்புக்கு தகுதியான குழந்தையாக கருதப்பட்டு சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளாா்.