எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கல்வெட்டான் குழியில் மூழ்கி ஆந்திர இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 9:33 pm

திருநெல்வேலி அருகே கல்வெட்டான்குழியில் மூழ்கி ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணம் நாயுடு (22). கட்டட தொழிலாளியான இவா் சீவலப்பேரி அருகே உள்ள பதினாலாம்பேரி பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள கல்வெட்டான்குழியில் குளிக்க சென்ற அவா், நீண்ட நேரமாகியும் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பவில்லை.

இதுகுறித்து சக தொழிலாளா்கள் சீவலப்பேரி போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இதையடுத்து போலீஸாா் மேற்கொண்ட தேடுதலில் அவா் கல்வெட்டான்குழியில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தந்து.

இதையடுத்து அங்கு வந்த கங்கைகொண்டான் தீயணைப்பு நிலைய வீரா்கள் நீண்ட தேடுதலுக்கு பிறகு அவரது உடலை மீட்டனா். இது குறித்து சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.