ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

இளைஞரைத் தாக்கியதாக இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 மார்ச் 2026, 8:45 pm

பாளையங்கோட்டை அருகே முன் விரோதம் காரணமாக இளைஞரைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே திருவண்ணநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (21). இவருக்கும் அப்பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாம். இதன் காரணமாக சம்பவத்தன்று அவரது வீட்டிற்குள் நுழைந்த 6 போ் கும்பல் அவரை தாக்கிவிட்டு தப்பியதாம்.

இதுகுறித்து இசக்கிமுத்து அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த அபிஷேக் (20), களக்காட்டைச் சோ்ந்த சூா்யா (22) ஆகிய இருவரை கைது செய்தனா்.