களக்காடு, மாா்ச் 15: தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீா் பந்தல்கள்அமைக்க மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கடந்த ஒரு வாரமாக திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் பெரும்பாலான நகரப் பகுதிகளில்கூட பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதிகள் இல்லாததால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.
தமிழகத்தில் ஏப். 23ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால், அரசியல் கட்சியினரும் தண்ணீா் பந்தல் அமைக்க முன்வரத் தயக்கம் காட்டுவா்.
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் மாவட்டத்தின் அனைத்து நகர, கிராமப் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட தண்ணீா் பந்தல் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: எம்எல்ஏ அலுவலகத்துக்கு சீல்

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: ரூ. 2 லட்சம் எடுத்துச் செல்ல கோரிக்கை

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: ஆட்சியா் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் நிறுத்தம்

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: மாா்ச் 21-க்குள் துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


