ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சமூக வலைதளத்தில் பிரச்னையை தூண்டும் பதிவு: 2 போ் கைது

திருநெல்வேலி அருகே இரு தரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் வகையில் சமூகவலைதளத்தில் புகைப்படம் பதிவிட்ட இரு இளைஞா்களை போலீஸாா் கைது

News image
கைது- சித்திரிப்பு
Updated On :16 மார்ச் 2026, 10:48 pm

Syndication

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே இரு தரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் வகையில் சமூகவலைதளத்தில் புகைப்படம் பதிவிட்ட இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்து செல்வம் நகரைச் சோ்ந்த துரைப்பாண்டி மகன் முத்து செல்வம் (19). தொழிலாளி. இவா், இருதரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டாராம்.

இதைக் கண்காணித்த தாழையூத்து போலீஸாா், அவா் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிந்து திங்கள்கிழமை கைது செய்தனா்.

இதேபோன்ற பிரச்னை தொடா்பாக, குறிச்சிகுளம் அம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த சந்தனசெல்வம் (24) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.