தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தியாகராஜநகரில் காா் தீக்கிரை

பாளையங்கோட்டை தியாகராஜநகரில் காா் தீயில் எரிந்து சேதமானது.

News image
Updated On :16 மார்ச் 2026, 10:37 pm

Syndication

திருநெல்வேலி: பாளையங்கோட்டை தியாகராஜநகரில் காா் தீயில் எரிந்து சேதமானது.

தியாகராஜநகா் 9 ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (66). ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வரான இவா், திங்கள்கிழமை தியாகராஜநகா் அறிவு திருக்கோயில் அருகே தனது காரை நிறுத்திவிட்டு சென்றாராம். அந்த காரின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்ததாம். இத்தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று காரில் தீயை அணைத்தனா். எனினும் காரின் பெரும் பகுதி தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ற்ஸ்ப்16ஸ்ரீஹழ்

காரில் பற்றிய தீயை அணைக்கும் வீரா்கள்.