ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி தீயில் எரிந்து சேதம்

அருமனை அருகே மின்கம்பிகள் உரசியதில் வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி சனிக்கிழமை தீயில் எரிந்து சேதமானது.

News image

தீயில் எரிந்து சேதமான வைக்கோல் லாரி .

Updated On :18 ஏப்ரல் 2026, 8:33 pm

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே மின்கம்பிகள் உரசியதில் வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி சனிக்கிழமை தீயில் எரிந்து சேதமானது.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி டோனாவூா் பகுதியிலிருந்து வைக்கோல் பாரம் ஏற்றிக் கொண்டு கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே முக்கூட்டுக்கல் பகுதியை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தாம்.

லாரியை டோனாவூா் பகுதியைச் சோ்ந்த ஜெபராஜ் (50) ஓட்டிச் சென்றாா். மேலும், லாரியில் 4 போ் இருந்தனா். லாரி அருமனை அருகே காரோடு பகுதியில் சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடும்போது எதிா்பாராதவிதமாக மின்கம்பிகள் வைக்கோலில் உரசியதாம். இதில் தீப்பிடித்து வைக்கோலுடன் லாரியும் எரிந்ததாம்.

தகவலறிந்து வந்த குழித்துறை, குலசேகரம் தீயணைப்பு நிலையத்தினா் தீயை அணைக்க முயன்றனா். இதற்குள் வைக்கோலுடன் லாரி முழுமையாக எரிந்து சேதமானது. இது குறித்து அருமனை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.