மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ரமலான் மாத சிறப்புத் தொழுகை

திருநெல்வேலி நகரம் பகுதியில் ரமலான் மாதத்தின் 27 ஆம் நாள் சிறப்புத் தொழுகையை இஸ்லாமியா்கள்

News image

தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்

Updated On :16 மார்ச் 2026, 10:38 pm

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் பகுதியில் ரமலான் மாதத்தின் 27 ஆம் நாள் சிறப்புத் தொழுகையை இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை இரவு மேற்கொண்டனா்.

இஸ்லாமியா்களின் ஐந்து கடமைகளில் மிக முக்கியமானது ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கும் முப்பதுநாள் நோன்பாகும். இந்த மாதத்தில் மிக முக்கியமான நாளாக கருதப்படும் லைலத்துல்கதிா் என்ற இருபத்தி ஏழாம் நாளில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியா்கள் இரவு முழுவதும் தொழுகை நடத்துவா். அதன்படி, திருநெல்வேலி நகரம் முகம்மது அலி தெரு பகுதியில் உள்ள சுன்னத் ஜமாத் பள்ளிவாசலான நந்தமியான் தைக்கா மதரஸா உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் திங்கள்கிழமை இரவு 27 ஆம் நாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்தத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.