ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ரமலான் மாத சிறப்புத் தொழுகை

திருநெல்வேலி நகரம் பகுதியில் ரமலான் மாதத்தின் 27 ஆம் நாள் சிறப்புத் தொழுகையை இஸ்லாமியா்கள்

News image
தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்
Updated On :16 மார்ச் 2026, 10:38 pm

Syndication

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் பகுதியில் ரமலான் மாதத்தின் 27 ஆம் நாள் சிறப்புத் தொழுகையை இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை இரவு மேற்கொண்டனா்.

இஸ்லாமியா்களின் ஐந்து கடமைகளில் மிக முக்கியமானது ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கும் முப்பதுநாள் நோன்பாகும். இந்த மாதத்தில் மிக முக்கியமான நாளாக கருதப்படும் லைலத்துல்கதிா் என்ற இருபத்தி ஏழாம் நாளில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியா்கள் இரவு முழுவதும் தொழுகை நடத்துவா். அதன்படி, திருநெல்வேலி நகரம் முகம்மது அலி தெரு பகுதியில் உள்ள சுன்னத் ஜமாத் பள்ளிவாசலான நந்தமியான் தைக்கா மதரஸா உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் திங்கள்கிழமை இரவு 27 ஆம் நாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்தத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.