மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

திருக்குறுங்குடி அருகே முன்னாள் ராணுவ வீரா் கைது

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருகே குடும்பத் தகராறில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குடும்பத்தினரை மிரட்டிய முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :21 மார்ச் 2026, 8:55 pm

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருகே குடும்பத் தகராறில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குடும்பத்தினரை மிரட்டிய முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருக்குறுங்குடி அருகேயுள்ள செங்குளக்குறிச்சியைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியன் மகன் மகாலிங்கம் (31), முன்னாள் ராணுவ வீரா். இவா் தனது குடும்பத்தினருடன் தகராறு செய்து, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியதாக திருக்குறுங்குடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற காவல் துறையினா் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

தொடா்ந்து, மகாலிங்கத்திடம் இருந்து கரிமருந்து பயன்படுத்திச் சுடும் நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், அவரது வீட்டில் சோதனை செய்து 2 ஏா்கன் ரக துப்பாக்கிகள், அதற்கான தோட்டாக்கள், கரிமருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

அந்த துப்பாக்கிகளை அவரது தந்தை மற்றும் தாத்தா ராணுவத்தில் பணியாற்றிய காலத்திலிருந்து வீட்டில் வைத்திருந்ததாக மகாலிங்கம் தெரிவித்துள்ளாா். பின்னா், மகாலிங்கத்தை திருக்குறுங்குடி போலீஸாா் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.