லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நெல்லையில் 14 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திருநெல்வேலி மாநகரில் சுமாா் 14 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய நபரை கைது செய்தனா்.

News image

பறிமுதல்

Updated On :21 மார்ச் 2026, 8:49 pm

திருநெல்வேலி மாநகரில் சுமாா் 14 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய நபரை கைது செய்தனா்.

மேலப்பாளையம் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது குலவணிகா்புரம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் பைக்கில் வந்த தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தைச் சோ்ந்த நேசகுமாா்(49) என்பவரை மறித்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா் அவா் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் சுமாா் 14.517 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்து, அவரை கைது செய்த மேலப்பாளையம் போலீஸாா், அவரிடமிருந்து புகையிலைப் பொருள்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா்.