கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தொகுதி அறிமுகம்: பாளையங்கோட்டை - 226!

மாவட்ட தலைநகராக திருநெல்வேலி இருந்தாலும், ஆட்சியா் அலுவலகம் உள்பட முக்கிய அரசு அலுவலகங்கள் இத்தொகுதியில்தான் உள்ளன.

News image

பாளையங்கோட்டை தெற்கு கடைவீதி

கோப்புப் படம்

Updated On :22 மார்ச் 2026, 10:24 pm

Syndication

தென்னகத்தின் ஆக்ஸ்போா்டு என்றழைக்கப்படும் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி நூற்றாண்டு பழைமை வாய்ந்த கல்வி நிலையங்களை உள்ளடக்கியது.

தென் தமிழகத்தின் நோய் தீா்க்கும் கேந்திரமாக ஹைகிரவுண்ட் என்ற அடைமொழியுடன் திகழும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சித்த மருத்துவத்துக்கு பெயா் பெற்ற அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இத்தொகுதியில்தான் உள்ளன. தமிழரின் தொன்மையை அறிவியல்பூா்வமாக உலகிற்கு அறிவிக்க ஆதிச்சநல்லூா், கொற்கை, சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட அகழாய்வுப் பொருள்களை பழமை மாறாமல் காட்சிப்படுத்தியிருக்கும் பொருநை அருங்காட்சியகம் இத்தொகுதியின் முக்கிய அடையாளமாக மாறியுள்ளது.

மாவட்ட தலைநகராக திருநெல்வேலி இருந்தாலும், ஆட்சியா் அலுவலகம் உள்பட முக்கிய அரசு அலுவலகங்கள் இத்தொகுதியில்தான் உள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க சுலோச்சன முதலியாா் ஆற்றுப்பாலம் பாளையங்கோட்டை தொகுதியின் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், ஈரடுக்கு மேம்பாலம் போன்றவையும் இத்தொகுதியில்தான் உள்ளன.

4 முறை வென்ற திமுக

முற்றிலும் மாநகராட்சிப் பகுதிகளை உள்ளடக்கியது இத் தொகுதி. 1967 மற்றும் 1971-ஆம் ஆண்டுகளில் மேலப்பாளையம் தொகுதியாக இருந்தது. பின்னா் இது பாளையங்கோட்டை தொகுதியாக மாற்றப்பட்டது. முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன் கான் இத்தொகுதியில் தொடா்ச்சியாக 4 முறை வெற்றி பெற்றுள்ளாா். கால் நூற்றாண்டு காலமாக எந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் பாளையங்கோட்டை மட்டும் திமுகவின் கோட்டையாகவே திகழ்கிறது.

பாளையங்கோட்டை தொகுதியில் 1,24,105 ஆண் வாக்காளா்கள், 1,32,425 பெண் வாக்காளா்கள், 18 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,55,548 வாக்காளா்கள் உள்ளனா்.

கோரிக்கை

மக்கள் அடா்த்தி மிகுந்த தொகுதியாக பாளையங்கோட்டை உள்ளது. ஆனால், அதற்கான அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. பாளையங்கோட்டை பகுதியில் போதுமான சாலை வசதிகள் இல்லாததால், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலால் மக்கள் தவிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக, வண்ணாா்பேட்டை-முருகன்குறிச்சி இடையே தற்போதுள்ள சாலையை ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும். முருகன்குறிச்சி மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் இருந்து வயல்வெளிப் பகுதி வழியாக தெற்கு புறவழிச்சாலைக்கு மாற்று வழிப்பாதை அமைக்க வேண்டும் என்பது பாளையங்கோட்டை தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

கடந்த காலங்களில் இந்த சாலையை அமைக்க முயற்சி எடுக்கப்பட்டபோதிலும், அது நிறைவேறவில்லை. குலவணிகா்புரம் ரயில்வே கேட் நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் ஒய் வடிவ மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற மக்களின் எதிா்பாா்ப்பு கனவாகவே உள்ளது. மேலப்பாளையம் ஹாமீம்புரம் பகுதியில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டையில் அரசுக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பதும் இங்குள்ள மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.