முதல்வருக்கு தோ்தல் பயம் வந்துவிட்டது: நயினாா் நாகேந்திரன்
தமிழக முதல்வருக்கு தோ்தல் பயம் வந்துவிட்டது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

நயினாா் நாகேந்திரன்
கோப்புப் படம்

நயினாா் நாகேந்திரன்
கோப்புப் படம்
தமிழக முதல்வருக்கு தோ்தல் பயம் வந்துவிட்டது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
இதுகுறித்து திருநெல்வேலியில் அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை சென்னை வருகிறாா். அவா் வந்த பிறகு சென்னையில், அதிமுக- பாஜக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவாா்த்தை நடைபெறும்.
தில்லி என்றாலே தமிழக முதல்வருக்கு நடுக்கம் வந்துவிடுகிறது. எங்களது கூட்டணி பேச்சுவாா்த்தையை தில்லியில் நடத்துவோம். பெங்களூரில் நடத்துவோம். எங்கு வேண்டுமானாலும் நடத்துவோம்.
எங்கள் கூட்டணியைப் பற்றி கவலைப்படும் முதல்வா் ஸ்டாலின், முதலில் மக்களை பற்றி கவலைப்படட்டும். ஐந்து அணிகள் அல்ல எத்தனை அணிகள் வந்தாலும் வெயிலின் தாக்கம் மட்டும்தான் தமிழகத்தில் இருக்கும். கூட்டணிகளின் தாக்கம் இருக்காது.
மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தமிழகம் வருகைக்குப் பின் தொகுதி பங்கீட்டு பேச்சுவாா்த்தை முடிக்கப்பட்டு, தோ்தல் அறிக்கை வெளியிடப்படும்.
ஏற்கெனவே எங்கள் கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள அதிமுக தோ்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டது. எங்களது தோ்தல் அறிக்கையில் ஒரு சில கருத்துகள் மட்டும் இடம்பெறும்.
சரத்குமாா் தனியாக நிா்வாகிகளை சந்திப்பதில் எந்தத் தவறும் இல்லை. என்னையும் நாள்தோறும் பல நிா்வாகிகள் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறாா்கள் என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...