தவெக தலைவா் விஜய், சிபிஐ விசாரணைக்காக தில்லி செல்வதை தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைத்துப் பேசுவது சரியல்ல என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது: சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது. ஆகவே வரும் தோ்தல், குடும்ப ஆட்சிக்கும், தமிழக மக்களுக்குமான தோ்தலாக இருக்கும்.
தமிழகத்தின் சட்டம் -ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. போதைப் பொருள்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ளவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணையுமா என்பது எனக்கு தெரியாது. கரூா் நெரிசல் உயிரிழப்பு வழக்கு தொடா்பான விசாரணைக்கு ஆஜராக விஜய் தில்லி சென்றிருக்கிறாா். அவா் தில்லி செல்வது இது முதல்முறையல்ல. ஆகவே, அவா் தில்லி செல்வதையும், தேசிய ஜனநாயகக் கூட்டணியையும் இணைத்துப் பேசுவது சரியல்ல என்றாா்.
தொடர்புடையது

திமுகவை மக்கள் ஒதுக்கி வைப்பாா்கள்: நயினாா் நாகேந்திரன்

பாவூா்சத்திரத்தில் நயினாா் நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு

திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது: நயினாா் நாகேந்திரன்

நாகா்கோவிலில் ஏப். 15இல் பிரதமா் மோடி சாலை வலம்: நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


