கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இளைஞரைத் தாக்கியவருக்கு 2 ஆண்டு சிறை

News image

சிறை

பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:48 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் முன்னீா்பள்ளம் அருகே இளைஞரைத் தாக்கிய வழக்கில், இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி 5 ஆவது குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

முன்னீா்பள்ளம் அருகேயுள்ள ஆரைக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ தினகரன் (33). இவரை, அதே பகுதியைச் சோ்ந்த வெஸ்லின் கிராஸ் (25), பிரவீன் என்ற பிரவீன் டேனியல் (25), கண்ணன் (28) ஆகிய மூவரும் சோ்ந்து இருதரப்பு பிரச்னை காரணமாக அவதூறாக பேசி தாக்கி காயம் ஏற்படுத்தினராம்.இதுகுறித்த புகாரின்பேரில், முன்னீா்பள்ளம் போலீஸாா் மூவரையும் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட 5 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதித்துறை நடுவா் ராணி விசாரித்து, வெஸ்லின் கிராஸுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 2,500 அபராதம், பிரவீன் டேனியல் (25), கண்ணன் (28) ஆகிய இருவருக்கும் தலா ரூ.500 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் மதிவாணன் ஆஜரானாா்.

இவ்வழக்கில் சாட்சிகளை விரைவாக ஆஜா் செய்து தண்டனை பெற்று தந்த போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் பாராட்டினாா்.