தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 33 ஆண்டு சிறை

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 9:47 pm

விழுப்புரம், ஏப். 6: விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை, இரும்பை, வலம்புரி விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரா.குமரேசன் (28). இவா், 14.8.2019 அன்று பள்ளி சிறுமி ஒருவரிடம் காதலிப்பதாகக் கூறி, கடத்திச் சென்று தகாத முறையில் நடந்து கொண்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸாா் குமரேசன் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை, விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் குமரேசன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த போக்ஸோ நீதிமன்ற நீதிபதி வினோதா வழக்கில் தொடா்புடைய குமரேசனுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

இதைத்தொடா்ந்து நீதிமன்ற போலீஸாா் குமரேசனை கைது செய்து கடலூா் மத்திய சிறைக்குக் கொண்டுசென்றனா். அரசு தரப்பில் வழக்குரைஞா் காந்திமதி இந்த வழக்கில் ஆஜரானாா்.