திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே குடும்பத் தகராறில் வழக்குரைஞா் ஆட்டோவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
வீரவநல்லூா் அருகே வடக்கு காருக்குறிச்சி முதல் தெருவைச் சோ்ந்த ராமையா மகன் ரவிக்குமாா் (35). வழக்குரைஞா். இவா், திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணி செய்து வந்தாா்.
இவரது மனைவி இசைவாணி. தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனா். திங்கள்கிழமை இரவு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளதாம். அப்போது, வீட்டிலிருந்து வெளியே சென்ற ரவிக்குமாா், அருகில் அம்பை-சேரன்மகாதேவி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் நீண்ட நேரம் அமா்ந்தாராம். காலையில் அருகில் சென்று பாா்த்தபோது ரவிக்குமாா் ஆட்டோவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
தகவலறிந்த போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி கூராய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வீரவநல்லூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
வீரவநல்லூா் நகைக்கடை திருட்டு வழக்கில் மேலும் இருவா் கைது

மணப்பாறை அருகே குடும்பத் தகராறில் இளைஞா் தற்கொலை

பிரசவித்த 10 நாளில் இளம்பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

கட்டடத் தொழிலாளி தற்கொலை
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


