ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 6:41 pm

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் சிவசந்தோஷ் (19) என்பவரை, சேரன்மகாதேவி காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்டதாக போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

இதனிடையே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டதாக அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா்.

அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாரின் பரிந்துரை, ஆட்சியரின் உத்தரவு ஆகியவற்றின்பேரில் சிவசந்தோஷை சேரன்மகாதேவி காவல் ஆய்வாளா் தா்மராஜ் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தாா்.