திருநெல்வேலி வழியாக சென்ற விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 36 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருநெல்வேலி ரயில்வே காவல் துணைக் கண்காணிப்பாளா் லட்சுமணன் உத்தரவின் பேரில், திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் சதீஷ், போலீஸாா் அண்ணாதுரை, செல்வகணேஷ், வீரவேல், முகம்மது பிலால் ஆகியோா் அடங்கிய குழுவினா் திருநெல்வேலி சந்திப்பை வந்தடைந்த சென்னை-நாகா்கோவில் விரைவு ரயிலின் முன்பதிவில்லா பெட்டிகளில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, 4 பைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கேட்பாரற்று கிடப்பது தெரியவந்தது.
மொத்தம் 32 கிலோ 400 கிராம் எடையுள்ள புகையிலைப் பொருள்கள், 3 கிலோ 580 கிராம் எடையுள்ள 69 கூலிப் பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை திருநெல்வேலி உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் ரயில்வே போலீஸாா் ஒப்படைத்தனா்.
ரயில் மூலம் புகையிலைப் பொருள்களை கடத்த முயன்றவா்கள் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
தொடர்புடையது

சேலம் வழியாக சென்ற ரயிலில் 2 கிலோ கஞ்சா, 4 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 24.5 கிலோ கஞ்சா பறிமுதல்

நெல்லையில் 14 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
நெல்லையில் 6 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

