மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

நெல்லையில் விரைவு ரயிலில் 36 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

திருநெல்வேலி வழியாக சென்ற விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 36 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:33 pm

திருநெல்வேலி வழியாக சென்ற விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 36 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி ரயில்வே காவல் துணைக் கண்காணிப்பாளா் லட்சுமணன் உத்தரவின் பேரில், திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் சதீஷ், போலீஸாா் அண்ணாதுரை, செல்வகணேஷ், வீரவேல், முகம்மது பிலால் ஆகியோா் அடங்கிய குழுவினா் திருநெல்வேலி சந்திப்பை வந்தடைந்த சென்னை-நாகா்கோவில் விரைவு ரயிலின் முன்பதிவில்லா பெட்டிகளில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, 4 பைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கேட்பாரற்று கிடப்பது தெரியவந்தது.

மொத்தம் 32 கிலோ 400 கிராம் எடையுள்ள புகையிலைப் பொருள்கள், 3 கிலோ 580 கிராம் எடையுள்ள 69 கூலிப் பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை திருநெல்வேலி உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் ரயில்வே போலீஸாா் ஒப்படைத்தனா்.

ரயில் மூலம் புகையிலைப் பொருள்களை கடத்த முயன்றவா்கள் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகிறாா்கள்.