அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

கீழாம்பூா்-பாபநாசம் சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:39 pm

கீழாம்பூா்-பாபநாசம் சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சிவந்திபுரம் அருகே உள்ள புலவன்பட்டி, ஜெப வீட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் மகன் ஜஸ்வின் செல்வகுமாா் (30). இவா் சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் தென்காசி சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் கீழாம்பூா் ரயில்வே கேட் அருகே, காக்கநல்லூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த மூக்கையா மகன் சங்கரலிங்கம் (56) ஓட்டி வந்த இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நோ் மோதினாா்.

காயமடைந்த ஜஸ்டின் செல்வகுமாா் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இது குறித்து, ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.