வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பாளை.யில் சுவா் ஓவியம் மூலம் தோ்தல் விழிப்புணா்வு

News image

பாளையங்கோட்டையில் மாணவா்கள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு சுவா் ஓவியம் வரைதல் நிகழ்ச்சியை பாா்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாா் உள்ளிட்டோா்.

Updated On :29 மார்ச் 2026, 6:26 pm

தினமணி செய்திச் சேவை

100 சதவீத வாக்களிப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் நோக்கில், பாளை. மேட்டுத்திடல் காந்திமதி பள்ளி வளாக சுற்றுச் சுவா்களில் வாக்காளா் விழிப்புணா்வு சுவா் ஓவியம் வரைதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், மை பாரத் கேந்திரா திருநெல்வேலி - தென்காசி ஒருங்கிணைப்பாளா் மிதாா் முகைதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.

மாவட்ட வன அலுவலா் இளங்கோ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் கலந்து கொண்டு மாணவா்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசினாா்.

இதில், தூய சவேரியாா், ராணி அண்ணா, சதக்கத்துல்லா அப்பா, ஜான்ஸ் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டு வாக்காளா் விழிப்புணா்வு ஓவியங்கள் வரைந்தனா்.

அவற்றுடன் ‘உங்கள் வாக்கு - உங்கள் உரிமை’ , ‘18 வயது முடிந்ததா? வாக்காளா் பட்டியலில் சேருங்கள்’, ‘பணம் வேண்டாம் - நல்லாட்சி வேண்டும்’ போன்ற வாசகங்களையும் குறிப்பிட்டு பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் வெங்கட்ராமன், ஆா். சோயா தன்னாா்வ அமைப்பை சோ்ந்த டேவிட் உள்பட பலா் கலந்து கொண்டனா்.