ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மருத்துவச் சீட்டில் வாக்காளா் விழிப்புணா்வு வாசகம்

மருத்துவச் சீட்டில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரத்தை புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான அ.குலோத்துங்கன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

மருத்துவச் சீட்டில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரத்தை தொடங்கி வைத்த புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ.குலோத்துங்கன்.

Updated On :26 மார்ச் 2026, 10:33 pm

தினமணி செய்திச் சேவை

மருத்துவச் சீட்டில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரத்தை புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான அ.குலோத்துங்கன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கதிா்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் பெற வருபவா்களுக்கு வழங்கப்படும் மருத்துவச் சீட்டில் வாக்காளா் விழிப்புணா்வு தகவல்கள் அச்சிட்ட சீட்டுகள் வழங்கப்பட்டன.

அதில் 100சதவீத வாக்குப் பதிவு மற்றும் கண்ணியமான வாக்குப்பதிவு பற்றிய கருத்துகள் அடங்கியுள்ளன. நோயாளிக்கு வழங்கப்படும் இந்த மருத்துவச் சீட்டினை மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டாா்.

இக் கல்லூரி இயக்குநா் மருத்துவா் உதயசங்கா், துணை மாவட்ட தோ்தல் அதிகாரி கண்ணபிரான் ஆகியோா் உடனிருந்தனா்.