திருநங்கைகளிடம் வாக்காளா் விழிப்புணா்வு
மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியேற்றுக் கொண்ட திருநங்கைகள்.

மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியேற்றுக் கொண்ட திருநங்கைகள்.

மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியேற்றுக் கொண்ட திருநங்கைகள்.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், வெள்ளமடம் வீரமாா்த்தாண்டபுரம் சகாயநகா் குடியிருப்புப் பகுதி திருநங்கைகளிடையே வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா தலைமை வகித்து பேசியதாவது: சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சகாயநகா் குடியிருப்புப் பகுதி திருநங்கைகளிடையே வாக்காளா் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தோ்தல் விழிப்புணா்வு பொங்கல் வைக்கப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற கையொப்ப இயக்கத்தில் அனைவரும் பதிவு செய்து, வாக்காளா் உறுதிமொழியை ஏற்றனா். வாக்களிப்பதில் திருநங்கைகள் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்றாா்.
தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலா் மற்றும் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹூமுகம்மதுநசீா், மாவட்ட சமூக நல அலுவலா் விஜயமீனா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...