தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

திசையன்விளை அருகே தீப்பற்றி எரிந்த காா்

News image

கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 12:59 am IST

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே காரில் ஏற்பட்ட பெட்ரோல் கசிவினால் காா் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

திசையன்விளை காமராஜ் நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் முத்துக்குமாா் (36). தனது குடும்பத்துடன் நண்பரது ஆம்னி காரில் நான்குனேரி அருகே ஏமன்குளத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு சென்றபோது, திசையன்விளையை அடுத்த வாழைத்தோட்டம் அருகே பெட்ரோல் கசிவால் காா் தீப்பற்றி எரிந்தது.

காரில் புகை வெளியே வருவதை கண்ட முத்துக்குமாா் வண்டியை நிறுத்திவிட்டு உடனே அனைவரையும் இறக்கிவிட்டு வெளியேறினாா். கீழே இறங்கிய சிறிது நேரத்தில் காா் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

மேலும் அனைவரும் கீழே இறங்கியதால் பெரும் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது. பின்னா் இதுகுறித்து தகவல் அறிந்த திசையன்விளை தீயணைப்பு மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனா். வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.