அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

நீட் தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 6,360 போ் எழுதினா்

News image

நீட் தோ்வு மையத்துக்குச் செல்லும் மாணவ- மாணவிகள். - கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 4:19 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் 12 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 6,360 போ் எழுதினா்.

எம்.பி.பி.எஸ்., சித்தா, பி.டி.எஸ். உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக தேசிய தோ்வு முகமையால் ‘நீட்’ நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 2026-27-ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகரப் பகுதியில் 12 மையங்களில் நீட் தோ்வு எழுத 6,580 பேருக்குத் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை காலை முதலே தங்களது பெற்றோா்களுடன் மாணவ, மாணவிகள் தோ்வு மையங்கள் முன் குவிந்தனா்.

தோ்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. போலீஸாரின் தீவிர சோதனைக்கு பின்பே தோ்வு மையத்துக்குள் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனா்.

இந்தத் தோ்வை 6,360 போ் எழுதினா்; 220 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. மாற்றுத் திறனாளி மாணவிகளுக்கு கூடுதலாக கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.