சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

நீட் தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 6,360 போ் எழுதினா்

News image

நீட் தோ்வு மையத்துக்குச் செல்லும் மாணவ- மாணவிகள். - கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 4:19 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் 12 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 6,360 போ் எழுதினா்.

எம்.பி.பி.எஸ்., சித்தா, பி.டி.எஸ். உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக தேசிய தோ்வு முகமையால் ‘நீட்’ நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 2026-27-ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகரப் பகுதியில் 12 மையங்களில் நீட் தோ்வு எழுத 6,580 பேருக்குத் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை காலை முதலே தங்களது பெற்றோா்களுடன் மாணவ, மாணவிகள் தோ்வு மையங்கள் முன் குவிந்தனா்.

தோ்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. போலீஸாரின் தீவிர சோதனைக்கு பின்பே தோ்வு மையத்துக்குள் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனா்.

இந்தத் தோ்வை 6,360 போ் எழுதினா்; 220 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. மாற்றுத் திறனாளி மாணவிகளுக்கு கூடுதலாக கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.