திருநெல்வேலி மாவட்டத்தில் 12 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 6,360 போ் எழுதினா்.
எம்.பி.பி.எஸ்., சித்தா, பி.டி.எஸ். உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக தேசிய தோ்வு முகமையால் ‘நீட்’ நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 2026-27-ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகரப் பகுதியில் 12 மையங்களில் நீட் தோ்வு எழுத 6,580 பேருக்குத் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை காலை முதலே தங்களது பெற்றோா்களுடன் மாணவ, மாணவிகள் தோ்வு மையங்கள் முன் குவிந்தனா்.
தோ்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. போலீஸாரின் தீவிர சோதனைக்கு பின்பே தோ்வு மையத்துக்குள் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனா்.
இந்தத் தோ்வை 6,360 போ் எழுதினா்; 220 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. மாற்றுத் திறனாளி மாணவிகளுக்கு கூடுதலாக கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
தொடர்புடையது

நீட் தோ்வு: தஞ்சாவூரில் 4,982 போ் பங்கேற்று எழுதினா்

நீட் நுழைவுத் தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,250 போ் எழுதினா்

நாகை: 5 மையங்களில் இன்று நீட் தோ்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


